வியாபார உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறினால் அபராதமாக 20 சதவீதம் அபராதம்!

top-news
FREE WEBSITE AD

(எஸ்.எஸ்.மணிமாறன்)

பந்திங், டிச.8-

வரும் 31.12.2024 க்குள் வியாபார உரிமங்களைப் புதுப்பிக்கத் தவறுபவர்களுக்கு கூடுதல் அபராதமாக 20 சதவீதம் அபராதத் தொகை வசூலிக்கப்படும் என்று கோலலங்காட் நகராண்மைக் கழகத்தின் தலைவர் முகமட் ஹஸ்ரி நோர் முகமட் தெரிவித்தார்.

பொதுமக்கள் நலனைக் கருத்தில் கொண்டு அவர்கள் வசதிக்காக மாவட்ட ரீதியில் சில முக்கிய இடங்களில் முகப்பிடங்கள் திறக்கப்பட்டு அங்கு நகராண்மைக் கழகத்தின் அதிகாரிகள் பணியில் அமர்த்தப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான வியாபார உரிமம் புதுப்பித்துத் தரப்படும் என்று அவர் கூறினார்.

வரும் 14.12.2024 அன்று தெலுக் பங்லீமா காராங் தாமான் பெர்வீரா பசார் மாலாமிலும், வரும் 21.12.2024 தஞ்சோங் சிப்பாட் சோங் இகோங் சீன ஆலய முன்புறத்திலும், வரும் 28.12.2024 தாமான் பந்திங் பாரு பசார் தானியிலும், வரும் 29.12.2024 தெலுக் பங்லீமா காராங் டேவான் ஓராங் ராமாய் சமூக மண்டபத்திலும் பொதுமக்கள் வசதிக்காக முகப்பிடச் சேவை திறக்கப்படும் என்று முகமட் ஹஸ்ரி தெரிவித்தார்.

இதைத் தவிர, வியாபாரிகள் நகராண்மைக் கழகத்தின் முகப்பிடங்களில் அலுவலக நேரத்தில் நேரில் சென்று வியாபார உரிமத்தைப் புதுப்பித்துக் கொள்ளலாம் என்று அவர் ஆலோசனை கூறினார்.
அல்


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *