இன்று தொடர் மழை எச்சரிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 30: மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) கிளந்தான் மற்றும் திரெங்கானுவில் உள்ள பல பகுதிகளில் இன்று தொடர் கனமழை எச்சரிக்கையை விடுத்துள்ளது.

நேற்று மாலை 6 மணிக்கு வெளியிடப்பட்ட எச்சரிக்கையின்படி, கிளந்தானில் ஜெலி, தானா மேரா, மாச்சாங் மற்றும் கோல கிராய் உள்ளிட்ட பகுதிகளும், திரெங்கானுவில் பெசூட், செத்தியூ, கோலா நெருஸ், உலு திரெங்கானு, டுங்கூன் மற்றும் கெமாமான் ஆகிய பகுதிகளும் பாதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே எச்சரிக்கை பகாங்கில் உள்ள குவாந்தனுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சிலாங்கூர் மாநிலத்தில் கிள்ளான் வட்டாரத்தில் காலை முதல் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசல், சாலைகளில் நீர்த்தேக்கம் என பொதுமக்கள் அவதிக்குள்ளாகியிருக்கின்றனர்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *