ஏப்ரலில் தைப்பிங் புக்கிட் லாருட் பூங்கா புதிய சலுகைகளுடன் ஆரம்பம்!

- Muthu Kumar
- 13 Feb, 2025
(தி.ஆர்.மேத்தியூஸ்)
தைப்பிங், பிப். 13
சீரமைப்பு மற்றும் மேம்பாட்டுப் பணிகளுக்காக கடந்த ஐந்து ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த புக்கிட் லாருட் பொழுதுபோக்கு பூங்கா,இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் திறக்கப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
2024 இல் வீடமைப்பு மற்றும் ஊராட்சி அமைச்சின் மானியத்தின் மூலம் இங்குள்ள நான்கு பங்களாக்கள் சீரமைப்பு மேம்பாட்டுப் பணிகள் முடிக்கப்பட்டு புக்கிட் லாருட் பொழுதுபோக்கு பூங்கா மீண்டும் திறக்கப்படவிருப்பதாக தைப்பிங் நகராண்மைக்கழகத்தின் தலைவர் கைருல் அமிர் முகமட் ஸுபிர் தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு இப்பகுதியில் ஏற்பட்ட மண் சரிவால் ஏற்பட்ட சம்பந்தப்பட்ட சாலைகள் பாதிப்பை பொதுப்பணி இலாகா அதே ஆண்டில் கட்டங்கட்டமாக சீரமைக்கும் பணியை மேற்கொண்டது என்றார்.மேலும் 2026 ஆண்டு மலேசியாவுக்கு வருகைத் தாருங்கள் சுற்றுலாத் திட்டத்தில் தைப்பிங் நகராண்மைக் கழகம் விடுபடக்கூடாது எனவும் கூறினார்.
இதனை முன்னிட்டு புதிய நிர்வாக நடவடிக்கையின் கீழ்,மீண்டும் புக்கிட் லாருட் பொழுதுபோக்கு பூங்காவை திறப்பதற்கு, மன்றம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என தெரிவித்த அவர்.இங்குள்ள பங்களா பெரிங்கின்,பங்களா அங்காசா மற்றும் பங்களா தெம்பினிஸ் ஆகிய மூன்று பங்களாக்களை வாடகைக்கு விடுவது உட்பட மற்ற வசதிகளும் திறந்து விடப்படும் என்றார்.
ஆர்வமுள்ளவர்கள் பங்களாவை முழுமையாக வாடகைக்கோ அல்லது பங்களாவிற்குள் உள்ள அறைகளையோ வாடகைக்கு எடுக்கலாம்.அதோடு இந்த பங்களாவில் வாடகைக்கு தங்குபவர்கள் மேலே ஏறி இறங்குவதற்கான வாடகை வாகன வசதிகளை தேர்வு செய்துக் கொள்வதற்குரிய வாய்ப்பும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார்.
பொழுதுபோக்கு பிரியர்கள் மற்றும் கூடார முகாம் நடவடிக்கை ஆகியவை, இங்கு குறிப்பிட்ட மற்றும் அனுமதிக்கப்பட்ட பகுதியில் திறக்கப்படும் என தெரிவித்த கைருல் அமிர் முகமட் ஸுபிர், 2025 ஏப்ரல் 1ஆம் தேதி நடவடிக்கைள் தொடங்கும் எனவும், 2025 பிப்ரவரி 17ஆம் தேதி முதல் கூடாரம் அமைப்பதற்கான இடங்கள் வாடகைக்கு விடப்படுமென கூறிய அவர்,இங்கு உள்ளே வருவோர், வெளியில் செல்வோர் யாவரும் குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டுமெனவும் செய்தியாளர்கள் கூட்டத்தில் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *