ஹேரி இண்டர்நேஷனல் டேலண்ட்ஸ் ஏற்பாட்டில் பெண்களுக்கான அழகுராணிப் போட்டி!

top-news
FREE WEBSITE AD

கிள்ளான். டிச. 31-

கலைத்துறையில் இந்தியப் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் ஹேரி இண்டர்நேஷனல் டேலண்ட்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் ஒவ்வொரு வருடமும் பெண்களுக்கான அழகுராணிப் போட்டி நடைபெற்று வருகிறது.

அந்த வகையில் இம்மாதம் 20ஆம் தேதி இரவு 7மணியளவில் கிள்ளான் கிரேண்ட் சென்ரோ போல்ரூமில் ஹேரி இண்டர்நேஷனல் டேலண்ட் நிறுவனத்தின் ஏற்பாட்டில் அழகுராணிப் போட்டி நடைபெற்றது.வாரிசான் நுசாந்தாராவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ஸ்ரீ சுகுந்தன் சிறப்புப் பிரமுகராக கலந்து கொண்டு இப்போட்டியைத் தொடக்கி வைத்தார்.

இப்போட்டியில் 100க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் மிஸ் மலேசியா (குமாரி) பிரிவில் இலங்கையைச் சேர்ந்த அன்ரன் யோகேந்திரன் - தேவகி தம்பதியரின் புதல்வியும் பைனரி கல்லூரி கணக்கியல் மாணவியுமான அன்ரலினா, இறுதிப் போட்டியாளர்கள் ஆறு பேரில் ஒருவராகக் கலந்து கொண்டார்.

இப்போட்டியில் வெற்றி பெற்ற போட்டியாளர்களுக்கு டத்தோஸ்ரீ டாக்டர் சுகுந்தன் பரிசுகளை வழங்கி வாழ்த்தையும் பாராட்டையும் தெரிவித்துக் கொண்டார்.





ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *