காஜாங் மருத்துவமனைக்கு சிலாங்கூர் அரசியாரின் பெயர் சூட்டப்பட்டது!

top-news
FREE WEBSITE AD

காஜாங், பிப் 13: காஜாங் மருத்துவமனை தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனை என மறுபெயரிடப்பட்டுள்ளது.

புதிய பெயரை அறிவிக்கும் விழாவை சிலாங்கூர் சுல்தான் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா நேற்று தொடக்கி வைத்தார்.

சிலாங்கூர் தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார்.

கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி செயல்படத் தொடங்கிய மருத்துவமனையின் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளாகம் (WCC) இந்த நிகழ்வில் திறக்கப்பட்டது.

தெங்கு பெர்மைசூரி நோராஷிகின் மருத்துவமனை 17 சிறப்பு சேவைகளுடன் ஆண்டுதோறும் 28,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு இடமளிக்கக்கூடிய நவீன வசதிகளைக் கொண்ட முக்கிய சிறப்பு மருத்துவமனைகளில் ஒன்றாகும் என்று சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கெஃப்லி அஹ்மத் தனது உரையில் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *