நஜிப்பின் இதயப்பூர்வமான பாராட்டுகள்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 3: முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக், எஞ்சிய சிறைத் தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்கும் முயற்சிக்கு ஆதரவளித்த அம்னோவுக்கு நஜிப்பின் மகன் நன்றி தெரிவித்தார்.

 ஜன. 6-ம் தேதி அரண்மனைக்கு வெளியே திரளான மக்கள் கூட்டம் உட்பட, அவருக்கு ஆதரவைத் திரட்ட பல்வேறு கட்சிகள் மேற்கொண்ட கூட்டு முயற்சிகள் குறித்து தனது தந்தையிடம் தாம் தெரிவித்ததாக நஜிப்பின் மகன் நஜிபுதீன் தமது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

பேரணியில் கலந்துகொள்வதற்காக தனது ஆதரவாளர்களுக்கு பேருந்துகள் மற்றும் கார்களை வழங்குதல் மற்றும் அவர்களின் அசைக்க முடியாத தார்மீக ஆதரவு குறித்தும் தாம் பேசியதாக அவர் பதிவிட்டுள்ளார்.

சம்பந்தப்பட்ட அனைவருக்கும் தனது இதயப்பூர்வமான பாராட்டுக்களை அவர் தெரிவித்ததாக நஜிபுதீன் கூறினார்!

 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *