நஜிப் வீட்டுக் காவல் விவகாரம்! அது போலியான அறிக்கை!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச 6:

முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கை வீட்டுக் காவலில் வைக்க உத்தரவிட்டதாகக் கூறப்படும் துணை உத்தரவு தொடர்பாக தனது அலுவலகத்தில் இருந்து வந்ததாகக் கூறப்படும் அறிக்கையைத் தாம் வெளியிடவில்லை என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டாக்டர் ஜலிஹா முஸ்தபா மறுத்துள்ளார்.

முன்னாள் மன்னர் அல்-சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவால் வெளியிடப்பட்டதாகக் கூறப்படும் அந்த உத்தரவு சட்டப்பூர்வமானது என்று இணையத்தில் பரப்பப்பட்ட  அந்த அறிக்கை கூறுகிறது.

இந்நிலையில், தான் ஒருபோதும் அறிக்கையை வெளியிடவில்லை என்று ஜலிஹா தமது எக்ஸ் பதிவில் தெரிவித்துள்ளார்.இது ஒரு பொறுப்பற்ற செயல், இந்த தவறான ஊடக அறிக்கையை வெளியிடும் அல்லது பரப்பும் எவருக்கும் எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாக என்று அவர் குறிப்பிட்டுள்ளார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *