அன்வார் சொன்னால் நான் கேட்க வேண்டுமா? - Akmal Saleh ஆவேசம்!

top-news

பிப்ரவரி 8,

இஸ்லாமியர்கள் பிற மத வழிபாடுகளில் பங்கேற்பதற்கானக் கட்டுப்பாடுகளைப் பிரதமர் அன்வார் நிராகாரிப்பதாகத் தெரிவித்ததை அம்னோ இளைஞர் பிரிவு தலைவர் Datuk Dr Muhamad Akmal Saleh கடுமையாக விமர்சித்துள்ளார். பிரதமர் அன்வார் சொன்னால் நான் கேட்க வேண்டுமா எனும் கேள்வியுடன் பிற மதத்தினர் இஸ்லாமிய விவகாரங்களில் ஈடுபட வேண்டியதில்லை என்றும் தெரிவித்தார்.
இஸ்லாமியர்களுக்கான வழிகாட்டுதலை முன்னிலைப்படுத்தியிருக்கும் JAKIM குறித்து இஸ்லாமியர் அல்லாதவர் ஏன் கவலையடைய வேண்டும் எனும் கேள்வியை Datuk Dr Muhamad Akmal Saleh முன்வைத்துள்ளார். 

உலக அளவில் இஸ்லாமியர்களின் செயல்பாடுகளில் முட்டுக்கட்டையாகப் பலரும் இயங்கி வருவதால் இந்த விவகாரத்தில் இஸ்லாம் அல்லாதவர்கள் ஒதுங்கியிருந்தால் நல்லது என்றும் அன்வார் சொல்லி விட்டார் என்பதற்காக இஸ்லாமியர்களுக்கானக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தாமல் இருக்க முடியாது என்றும் Datuk Dr Muhamad Akmal Saleh தெரிவித்தார்.

Ketua Pemuda UMNO Datuk Dr. Muhamad Akmal Saleh mempertikaikan kenyataan Perdana Menteri Datuk Seri Anwar Ibrahim mengenai larangan umat Islam menghadiri upacara agama lain. Beliau menegaskan bahawa JAKIM berhak mengeluarkan garis panduan tanpa campur tangan pihak luar.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *