கோலாலம்பூர், ஜன 3: மலாக்கா, துரியான் டுங்காலில்
சுட்டுக் கொல்லப்பட்ட மூன்று பேரின் குடும்பத்தினர் நவம்பர் 24 அன்று, துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட போலீசார் மீது
நடவடிக்கை எடுப்பது உள்ளிட்ட ஐந்து கோரிக்கைகளை கோடிட்டுக் காட்டும் ஒரு
குறிப்பாணையை காவல் துறைத் தலைவர் காலித் இஸ்மாயிலிடம் ஒப்படைத்தனர்.
சம்பந்தப்பட்ட
காவல்துறை அதிகாரிகளைக் கைது செய்ய வேண்டும்; கொலை விசாரணை நடந்து
கொண்டிருக்கும் வரை அவர்களின் பணி நீக்கம் செய்ய வேண்டும். மலாக்க காவல்துறைத் தலைவர் சூல்கைரி முக்தாரை
இடமாற்றம் செய்ய வேண்டும் அல்லது இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று தங்கள் கோரிக்கைகளை
முன்வைத்துள்ளனர். ஆதாரங்கள் அழிக்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள்
குறித்து விசாரணை நடத்த வேண்டும்;
பொய்யான அறிக்கைகள்
வழங்கப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்
என்று குடும்பங்கள் கோரின.
குடும்பங்களைப்
பிரதிநிதித்துவப்படுத்தும் வழக்கறிஞர் ஜைத் மாலேக், இந்த வழக்கு மற்ற
விசாரணைகளிலிருந்து வித்தியாசமாக நடத்தப்படுவதாகக் கூறினார்.
குற்றவியல்
சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் கொலைக்காக வழக்கு விசாரிக்கப்பட்ட
போதிலும், சம்பந்தப்பட்ட போலீசார் கைது செய்யப்படவில்லை அல்லது
பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படவில்லை என்று அவர் கூறினார்.
பொதுமக்கள்
சம்பந்தப்பட்டிருந்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கும். இருப்பினும், இந்த வழக்கில், உயிர்கள் இழந்த போதிலும், சம்பந்தப்பட்ட பணியாளர்கள் இன்னும் பணியில் உள்ளனர் என்று அவர் புக்கிட் அமான்
கூட்டாட்சி காவல் தலைமையகத்திற்கு வெளியே நடந்த செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்!