மலேசியா - உலக அரங்கில் மரியாதைக்குரிய சுற்றுலாத்தளம்! - அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 2: புத்தாண்டு கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்வது நல்லிணக்கத்தையும் தேசிய ஒற்றுமையையும் வலுப்படுத்த உதவுகிறது என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

இது மலேசியாவை உலக அரங்கில் மரியாதைக்குரிய சுற்றுலாத் தலமாக நிலைநிறுத்துகிறது என்று அவர் நேற்று தமது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார.

புத்தாண்டை முன்னிட்டு பண்டிகை சூழ்நிலையில் நடைபெற்ற கொண்டாட்டங்கள், விசிட் மலேசியா 2026 (VM2026) பிரச்சாரத்திற்கான ஆரம்ப ஊக்கியாகவும் செயல்பட்டதாக அலன்வார்  கூறினார்.

இந்தக் கொண்டாட்டங்கள் மலேசியாவின் கலாச்சார பன்முகத்தன்மையின் அழகையும், உலகெங்கிலும் இருந்து வரும் பார்வையாளர்களை வரவேற்பதில் மலேசியர்களிடையே ஒற்றுமையின் உணர்வையும் பிரதிபலித்தன என்று அவர் மேலும் கூறினார்.

வானவேடிக்கை காட்சிகள் உட்பட பெரிய அளவிலான மல்டிமீடியா நிகழ்ச்சிகள், அமைதியான மற்றும் ஒழுங்கான சூழ்நிலையில் முக்கிய சுற்றுலா இடங்களை ஒளிரச் செய்தன என்று அவர் பாராட்டினார்.

விசிட் மலேசியா 2026 பிரச்சாரம் கோலாலம்பூரில் நடைபெற்ற பெரிய அளவிலான புத்தாண்டு கொண்டாட்டமான விசிட் மலேசியா 2026 கவுண்டவுன் விழா மூலம் அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.

மலேசியாவை முன்னணி உலகளாவிய சுற்றுலா தலமாக நிலைநிறுத்துவதற்கான அதன் விருப்பத்திற்கு ஏற்ப, இந்த ஆண்டு 43 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை ஈர்க்க முடியும் என மலேசியா நம்புகிறது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *