உலகெங்கிலும் மலேசியா ஏர்லைன்ஸ்!- அந்தோணி லோக் நம்பிக்கை

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், டிச 19: மலேசியா ஏர்லைன்ஸ் உலகளவில் புதிய வழித்தடங்களை ஆராயும் என்று அரசாங்கம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளதாக  போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் தெரிவித்துள்ளார்.

தேசிய விமான நிறுவனமான மலேசியா ஏர்லைன்ஸ் ஒரு நாள் உலகெங்கிலும் உள்ள அனைத்து முக்கிய விமான நிலையங்களுக்கும் பறக்கும் என்று தாம் நம்புவதாக அவர் கூறினார்.

எதிர்காலத்தில், ஐரோப்பாவிற்கு விமானங்களை மீண்டும் தொடங்க முடியும் என்றும், இது அடுத்த ஆண்டுக்கான திட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் என்று தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

மலேசிய சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும், மலேசியாவுக்கு அதிக சுற்றுலாப் பயணிகளை வரவழைக்கவும் சாத்தியம் இருப்பதாகவும், மலேசியன் ஏர்லைன்ஸ் இதில் முக்கியப் பங்கு வகிக்கிறது என்றும் லோக் இன்று ஏர்லைன்ஸ்  A330 neo விமானத்தை அறிமுகப்படுத்திய போது கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *