முதலீட்டாளர்களுக்கான நாடு மலேசியா! – அன்வார்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 16: முதலீட்டாளர்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க இடமாக மலேசியா தனித்து விளங்குகிறது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.

நாட்டின் அரசியல் நிலைத்தன்மை மற்றும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப நிலப்பரப்புக்கு ஏற்ப நாட்டின் திறன் ஆகியவற்றால் மலேசியா ஆதரிக்கப்படுவதாக அன்வார் கூறினார்.

உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆர்வத்தை ஈர்க்கும் குறிப்பிடத்தக்க காரணிகள் இவை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

கூடுதலாக, எரிசக்தி, செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைக்கடத்திகள் போன்ற முக்கியமான துறைகளில் அரசாங்கம் செலுத்தும் கூடுதல் கவனம் நாட்டை உலகளாவிய முதலீட்டாளர்களிடையே மிகவும் ஈர்க்கும் சக்தியாக விளங்குகிறது என்று அவர் இன்று தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளார்.

நேற்று இங்கிலாந்தின் தென்மேற்கில் உள்ள மிகப்பெரிய நகரமான Bristoலில் YTL குழுமத்தின் Brabazon New Town மேம்பாட்டின் தொடக்க விழாவில் உரையாற்றியபோது இந்தக் காரணிகள் முன்னிலைப்படுத்தப்பட்டதாக அன்வார் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *