வளைகுட நாடுகளுடன் முதன் முறையாக இணையும் மலேசியா!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், மே 26: மலேசியாவும் வளைகுடா ஒத்துழைப்பு மன்றமான GCCயும் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்திற்கான முறையான பேச்சுவார்த்தைகளைத் தொடங்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

மலேசியா GCC உடன் ஒரே பொருளாதாரக் கூட்டமைப்பாக ஈடுபடுவது இதுவே முதல் முறை என்று முதலீடு, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தெங்கு சஃப்ருல் அஜீஸ் கூறினார்.

இதை ஒரு நேர்மறையான வளர்ச்சியாக நாங்கள் பார்க்கிறோம். முன்னதாக, நாங்கள் ஐக்கிய அரபு எமிரேட்ஸுடன் ஒரு விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு இறுதி செய்தோம். இந்த முறை, ஜி.சி.சி-க்குள் உள்ள ஆறு நாடுகளையும் நாங்கள் ஈடுபடுத்துகிறோம் என்று அவர் கூறினார்.

இது நிறுவனங்கள் ஜி.சி.சி சந்தையில் சிறந்த அணுகலைப் பெற உதவும் என்று அவர் இன்று 46வது ஆசியான் உச்ச நிலை மாநாட்டின் போது செய்தியாளர்களிடம் கூறினார்.

மலேசியாவிற்கும் ஜி.சி.சி-க்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் தற்போது 22 பில்லியன் அமெரிக்க டாலர்கள் (RM103.4 பில்லியன்) ஆக இருப்பதால், எதிர்காலம் நம்பிக்கைக்குரியது என்றும் அவர் கூறினார்.

ஜி.சி.சி-யில் சவுதி அரேபியா, UAE, கத்தார், குவைத், பஹ்ரைன் மற்றும் ஓமன் ஆகியவை உள்ளன!

Malaysia menandatangani perjanjian persefahaman dengan GCC bagi memulakan rundingan Perjanjian Perdagangan Bebas. Ini kali pertama Malaysia melibatkan enam negara GCC sekaligus, memperkukuh perdagangan bernilai AS$22 bilion.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *