மலேசியா – இந்தியாவின் புதிய டிஜிட்டல் முயற்சி!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜன 10:  இந்தியாவின் புவனேஸ்வரில் நடைபெற்ற 18வது பிரவாசி மாநாட்டில், மலேசியாவின் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் தியோ மற்றும் இந்தியாவின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆகியோருக்கு இடையேயான சந்திப்பைத் தொடர்ந்து மலேசியா-இந்தியா இலக்கவியல் மன்றமான MIDC முறைப்படுத்தப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் வர்த்தகம், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் திறமை இயக்கம் ஆகியவற்றை MIDC இயக்க உள்ளது.

இந்த முக்கிய முயற்சி மலேசியாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான இருதரப்பு உறவுகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துகிறது என்று இன்று ஓர் அறிக்கையில், கோபிந்த் தெரிவித்துள்ளார்.  கலாச்சார உறவுகளை வலுப்படுத்துகிறது, இரு நாடுகளின் டிஜிட்டல் கண்டுபிடிப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகளின் முழு திறனையும் மேலும் திறந்துவிடுகிறது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *