இந்தோனேசிய ஓபன் 2025 மலேசிய இரட்டையர் ஜோடிகள் அரையிறுதிக்கு முன்னேறினர்!

- Muthu Kumar
- 08 Jun, 2025
கோலாலம்பூர், ஜூன் 8-
2025 இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் மலேசியாவின் ஆண்கள் இரட்டையர் ஜோடியான மன் வெய் சோங்-டீ கை வூன். பெண்கள் இரட்டையர் ஜோடியான பேர்லி டான்-எம். தினா அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். ஆண்கள் இரட்டையர்
பிரிவில், வெய் சோங்-கை வூன் ஜோடி, முன்னாள் உலகின் முதல் நிலை ஜோடியான இந்தியாவின் சாய் விக்சைராஜ் ரங்கிரெட்டி சிராக் ஷெட்டி ஜோடியை 43 நிமிடங்களில் 21-19, 21-16 கணக்கில் வீழ்த்தி, முதல் முறையாக அவர்களுக்கு எதிரான ஆட்டத்தில் வெற்றி பெற்றனர்.
இவர்கள் அரையிறுதியில் இந்தோனேசியாவின் சபர் கார்யமன் குட்டாமா-மோ ரேசா பஹ்லேவி இஸ்ஃபஹானி ஜோடியை எதிர்கொள்ளவுள்ளனர். பெண்கள் இரட்டையர் பிரிவில், உலக தரவரிசையில் 4ஆவது இடத்தில் உள்ள பேர்லி-தினா ஜோடி, ஜப்பானின் ரின் இவானாகா-கீ நகானிஷி ஜோடியை 37 நிமிடங்களில் 21-6,21-18 என்ற செட் கணக்கில் எளிதாக வென்றனர். இவர்கள் அரையிறுதியில் சீனாவின் லி யி ஜிங்-லூ சு மின் ஜோடியுடன் மோதவுள்ளனர்.
பேர்லி-தினா ஜோடி, வாகை சூட வேண்டி தங்களது முழு நம்பிக்கையையும் உத்தியையும் ஆட்டத்தில் வெளிப்படுத்தி இப்போட்டியில் வெற்றி பெற எண்ணம் பூண்டுள்ளனர். இரு ஜோடிகளும் இந்தப் போட்டியில் தங்களது வலுவான ஆட்டத்தை வெளிப்படுத்தி. மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
Pasangan beregu lelaki Man Wei Chong-Tee Kai Wun dan beregu wanita Pearly Tan-M. Thinaah layak ke separuh akhir Terbuka Indonesia 2025. Mereka menewaskan lawan masing-masing dari India dan Jepun, dan akan bertemu pasangan dari Indonesia dan China.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *