மலேசிய பேரரசர் – சிங்கப்பூர் பிரதமர் சந்திப்பு!

- Shan Siva
- 07 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 7: மாட்சிமை தங்கிய மலேசிய பேரரசர் சுல்தான் இப்ராஹிமுடன் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் இன்று சந்திப்பை நிகழ்த்தினார்.
சுமார் ஒரு மணி நேரம் நடைபெற்ற இச்சந்திப்பில்
வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஹசான் மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ
டாக்டர் ஜாம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரண்டு நாள் அரசுமுறை
பயணம் மேற்கொண்டுள்ள வோங், தனது
தூதுக்குழுவுடன் சுமார் 8.30 மணியளவில்
இஸ்தானா நெகாராவை வந்தடைந்தார்.
கடந்த ஆண்டு மே 15ஆம் தேதி பதவியேற்ற பிறகு வோங் மலேசியாவுக்கு மேற்கொள்ளும் இரண்டாவது பயணம் இதுவாகும். அவரது முதல் வருகை ஜூன் 11 அன்று அமைந்தது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *