தாய்லாந்தில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் மலேசியர்கள் காயம்!

- Shan Siva
- 13 Jan, 2025
பட்டானி, ஜன 13: தெற்கு தாய்லாந்தின் பட்டானி மாகாணத்தில் உள்ள
முவாங் பட்டானி மாவட்ட காவல் நிலையம் அருகே இன்று காலை நடந்த குண்டுவெடிப்பில் ஒரு
மலேசிய ஆண் மற்றும் ஆறு தன்னார்வ பாதுகாப்பு வீரர்கள் காயமடைந்தனர்.
காவல்
நிலையத்தில் நடந்த போலீஸ் அணிவகுப்புக்குப் பிறகு காலை 8 மணியளவில் இந்த சம்பவம்
நடந்ததாக முவாங் பட்டானி காவல்துறைத் தலைவர் ஜெஃப்ரி சுலைமான் தெரிவித்தார்.
முதற்கட்ட
விசாரணையில், காவல் நிலையம்
அருகே நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் வெடிகுண்டு இணைக்கப்பட்டதாக
நம்பப்படுகிறது,” என்று அவர் சம்பவ
இடத்தில் செய்தியாளர்களிடம் கூறினார்.
கோலாலம்பூரைச்
சேர்ந்த 20 வயது மலேசிய நபர் வெடிப்பால் உடைந்த கண்ணாடியால் காயமடைந்ததாக ஜெஃப்ரி
கூறினார்.
பாதிக்கப்பட்டவரின்
கார் வெடிப்பு நடந்த இடத்திலிருந்து சுமார் 10 மீ தொலைவில் இருந்தது. மேலும் குண்டுவெடிப்பு தாக்கத்தால் வாகனத்தின்
கண்ணாடிகள் உடைந்ததாக ஜெஃப்ரி மேலும் கூறினார்.
பாதிக்கப்பட்டவர்கள்
சிகிச்சைக்காக பட்டானி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
குற்றவாளிகளைக்
கண்டுபிடிக்க காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது என்று ஜெஃப்ரி கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *