மியன்மாரில் மனிதநேய நெருக்கடியைக் கையாள 5பிசியை மலேசியா ஆராயும்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 18- மியன்மாரில்

மனிதநேய நெருக்கடியைக் கையாள்வதற்கு, அடுத்த ஆண்டில் ஆசியான் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் மலேசியா, அதன் உறுப்பு நாடுகளுடன் இணைந்து, 5பிசி எனப்படும் ஒருமித்த ஐந்து கருத்துகளின் செயல் திறனை ஆராயவிருக்கிறது. ஆக்கப்பூர்வமான அமலாக்கத்தை உறுதிசெய்வதையும் முந்தைய தோல்விகளை கையாள்வதையும் இம்முயற்சி நோக்கமாகக் கொண்டுள்ளதாக வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ முஹமட் ஹசான் தெரிவித்தார்.

இதர நாடுகளோ அல்லது குறிப்பிட்ட தரப்போ 5பிசியை தவிர்த்து இதர வழிமுறைகளைப் பயன்படுத்துவதை மலேசியா விரும்பவில்லை என்று அவர் கூறினார்.அதேவேளையில், மியன்மார் விவகாரத்தில், இந்த 5பிசியை எவ்வாறு செயல்படுத்துவது என்பது குறித்து மலேசியா முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்ளவிருப்பதோடு அதன் தொடர்பில் ஆராயும் என்று முஹமட் ஹசான் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் ஆசியானிற்கு மலேசியா தலைமையேற்பதை முன்னிட்டு நேற்று முன்தினம் இரவு, கோலாலம்பூரில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் அவ்வாறு குறிப்பிட்டார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *