பாலஸ்தீனர்கள் கலவர விவகாரம்- அமைச்சரவைக்குக் கொண்டு செல்லப்படும்!

top-news
FREE WEBSITE AD

சிப்பாங், ஜன. 7-

கோலாலம்பூர் டிரான்சிட் கட்டடத்தில் அண்மையில் பாலஸ்தீனர்கள் கலகம் புரிந்த சம்பவம், மேல் நடவடிக்கைக்காக, நாளை புதன்கிழமை நடைபெறும் வாராந்திர அமைச்சரவைக் கூட்டத்திற்கு கொண்டு செல்லப்பட விருக்கிறது.அக்கூட்டத்தில், அச்சம்பவம் குறித்த தகவல்கள், தற்காப்பு அமைச்சர் காலிட் நோர்டினிடமிருந்து பெறப்படும் என்று, தொடர்புத் துறை அமைச்சர் ஃபாமி ஃபாட்சில் தெரிவித்தார்.

“கோலாலம்பூர் டிரான்சிட் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள பாலஸ்தீனர்கள் அனைவரையும் புதிய இடத்திற்கு மாற்றுவது குறித்த விவகாரம், கடந்த சில அமைச்சரவைக் கூட்டங்களில் எழுப்பப்பட்டதாக அவர் தெரிவித்தார்.ஆனால், அது குறித்து இதுவரையில் அமைச்சரவையில் தகவல் ஏதும் தெரிவிக்கப்படவில்லை என்றும் நாளை புதன்கிழமை நடைபெறும் அமைச்சரவைக் கூட்டத்திற்கு பிறகு இதன் தொடர்பிலான ஆகக் கடைசியான தகவல்கள் செய்தியாளர்களிடம் தெரிவிக்கப்படும் என்றும் சிலாங்கூர், சிப்பாங்கில் நேற்று திங்கள்கிழமை ஃபாமி தெரிவித்தார்.

சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டதுபோல், கோலாலம்பூர் டிரான்சிட் கட்டடத்தில், கடந்த சனிக்கிழமை மாலையில் பாலஸ்தீனர்கள் சம்பந்தப்பட்ட கலவரம் நடைபெற்றதை ஆயுதப்படையினர் ஞாயிற்றுக்கிழமை உறுதிப்படுத்தினர்.தங்களை தங்களின் தாய் நாட்டிற்கேத் திருப்பி அனுப்பி வைக்குமாறு கோரி, சனிக்கிழமை மாலை 5 மணியளவில் பாலஸ்தீனர்கள் கலகத்தில் ஈடுபட்டனர் என்று ஆயுதப்படையினர் தெரிவித்தனர்.

பாலஸ்தீனர்கள் கடந்த ஆண்டு அக்டோபரில்' இதுபோன்ற ஒரு கலவரத்தில் ஈடுபட்டிருந்தனர். அதன் பின்னர் அவர்கள் அவ்வாறு நடந்துக் கொண்டிருப்பது இது இரண்டாவது தடவையாகும்.பாலஸ்தீனத்தின் காசா முனையில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் காயமடைந்த 41 நோயாளிகள் உட்பட 127 பாலஸ்தீனர்களை மலேசியா கடந்த ஆகஸ்ட் 16 ஆம் தேதி நாட்டிற்குள் கொண்டு வந்தது.

நோயாளிகள் அனைவரும் துவாங்கு மிஸான் ராணுவப் படை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேளையில், அவர்களின் உறவினர்களான 127 பேர் கோலாலம்பூர் டிரான்சிட் கட்டடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *