நஜிப் ஆதரவு பேரணி... தடைகளை மீறி கூடிய 3000 பேர்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜன 6: போலிஸாரின் தடைகளை மீறி முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக்கிற்கு இன்று 3,000 க்கும் மேற்பட்டோர் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் நீதி மன்றத்திற்கு வெளியே கூடினர்.

PAS, Bersatu, Umno மற்றும் சில அரசு சாரா ஆதரவாளர்கள் உட்பட கலந்துகொண்ட இக்கூட்டம் காலை 6.30 மணிக்கு பேரணியைத் தொடங்கியறு. "#Justice4Najib" மற்றும் "#BebasNajib" போன்ற செய்திகளைக் கொண்ட பதாகைகளை அவர்கள் வைத்திருந்தனர்.

PAS பொதுச்செயலாளர் தக்கியுதீன் ஹசான், பெர்சாத்து துணைத் தலைவர் ஹம்சா ஜைனுதீன் மற்றும் PAS துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் ஆகியோர் நீதிமன்ற வளாகத்திற்குள் காணப்பட்டனர்.

அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் டாக்டர் அக்மல் சலேவும் பேரணியில் கலந்து கொண்டார். அவர் தனது முகநூல் பதிவில், “அனாக் ஜன்தன் (உண்மையான மனிதர்கள்) மக்களுடன் இருக்கிறார்கள். மக்களைப் பயன்படுத்தும் போது நாங்கள் ஹோட்டல் அறைகளில் தங்குவதில்லை என்று பதிவிட்டுள்ளார்.

கெடா மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமட் சானுசி முகமட் நோர் 10.40  மணியளவில் வந்து கலந்து கொண்டார்.

இந்நிலையில் பேரணிக்குச் செல்லும் வழியில் நஜிப்பின் ஆதரவாளர்களின் குறைந்தபட்சம் மூன்று பேருந்துகள் இன்று காலை நிர்வாகத் தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. போலீஸார் அவற்றைத் தடுத்து நிறுத்தினர்.

முன்னதாக புத்ராஜெயாவுக்குள் நுழைய முயலும் வாகனங்கள் மீது சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டு கடுமையான சோதனை நடத்தப்படும் என்று புத்ராஜெயா காவல்துறைத் தலைவர் அய்டி ஷாம் மொஹமட் நேற்று தெரிவித்திருந்தார்.

எஞ்சியிருக்கும் சிறைத்தண்டனையை வீட்டுக் காவலில் அனுபவிக்க நஜிப்பின் மேல்முறையீட்டில் புதிய ஆதாரங்களைச் சேர்க்க அனுமதி கோரிய நஜிப் மனுவை மேல்முறையீட்டு நீதிமன்றம் இன்று விசாரிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *