கொள்கலன் லோரி விபத்தினால் நெடுஞ்சாலையில் செம்பனை எண்ணெய் கசிந்தது!

top-news
FREE WEBSITE AD


(நமது நிருபர்)

தாப்பா, ஜன.17-

வடக்கு-தெற்கு நெடுஞ்சாலை தெற்குப் பகுதியின் 348.2ஆவது கி.மீட்டரில் நிகழ்ந்த கொள்கலன் லோரி விபத்து செம்பனை எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதில் நெடுஞ்சாலை பயனீட்டாளர்கள் பதற்றத்திற்குள்ளாகினர்.

இந்த எண்ணெய்க் கசிவு சம்பவம் ஒரு கொள்கலன் லோரியின் பின்புறத்தில் மற்றொரு லோரி மோதியதால் ஏற்பட்டதாக பேரா மாநிலத் தீயணைப்பு மீட்புத் துறையின் நடவடிக்கைப் பிரிவுத் துணை இயக்குநர் சபாரொட்சி நோர் அகமட் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் நிகழ்ந்த இச்சம்பவம் தொடர்பில் நண்பகல் 12.52 மணிக்கு அவசர அழைப்பு வந்ததை தொடர்ந்து பீடோர் தீயணைப்பு நிலையத்திலிருந்து 7 தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.அந்த கொள்கலன் லோரிக்கு மற்றொரு லோரி மீது மோதி கசிவு ஏற்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *