தாமான் துன்.சம்பந்தன் விளையாட்டு மைதானம் மேம்பாடு காண்கிறது-ஙா கோர் மிங் உறுதி!

top-news
FREE WEBSITE AD

(டிகே.மூர்த்தி)

சுங்கை சிப்புட், ஜன.26-

இங்குள்ள தாமான் துன்.சம்பந்தன் குடியிருப்பு வட்டாரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தை மேம்படுத்த வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கேசவன் சுப்பிரமணியம் தெரிவித்தார்.

கடந்த 19.1.2025 இல் மலேசிய இந்து சங்கம், சுங்கை சிப்புட் வட்டாரப் பேரவையினர் அந்த விளையாட்டு மைதானத்தில் நடத்திய ஒற்றுமைப் பொங்கல் விழாவுக்கு தாம் தலைமையேற்றுள்ள நிலையில், இளைஞர்களின் கோரிக்கை நியாயமானது தான் என்பது அறியப்பட்டது என்றார்.

நேற்று 25.1.2025 இல் இங்குள்ள சீனர்கள் அதிகமாக வாழும் கம்போங் பாருவில் உள்ள 2 தாமான் மக்களுக்காக பழைய விளையாட்டுத் திடலை வீடமைப்பு மற்றும் ஊராட்சி மேம்பாட்டு அமைச்சகத்தின் சுமார் வெ500,000 மானியத்தில் தற்போது நவீன மடானி என்னும் பெயருடன் அந்த மைதானம் உருமாற்றம் அடைந்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் என்னும் முறையில், அமைச்சரின் நிகழ்ச்சியில் நானும் கலந்து கொண்டுள்ளேன். அந்த மடானி விளையாட்டுத் திடலில், பிள்ளைகள் விளையாடுவதற்கும், முதியோர்கள் தங்கள் உடல் நலத்தைப் பேணிக்காப்பதற்கு நடைபாதையும் பிரத்தியேகமாக ஒதுக்கப்பட்டுள்ளது ஒரு சிறந்த திட்டமாகும் எனக் கேசவன் சுட்டிக்காட்டினார்.

தமக்கும் அமைச்சர் ஙா கோர் மிங்கிற்கும் நடைபெற்ற சந்திப்பின் போது, தாமான் துன்.சம்பந்தன் விளையாட்டு மைதானமும் ஒரு மடானி விளையாட்டு திடலாக உருமாற்றம் பெறவேண்டும் என்று கேட்டுக் கொண்டேன் என்றார். அதற்கு அமைச்சரும் உடனடியாக உறுதி அளித்துள்ளார். இந்நிலையில், மற்ற மடானி மைதானங்களைப் போல் தாமான் துன். சம்பந்தன் மைதானம் மேம்பாடு காணும் என்று கேசவன் தெரிவித்தார். மேலும், சுங்கை சிப்புட் இந்திய இளைஞர்களின் சார்பில் அமைச்சருக்கு நல்லுணர்வை வெளிப்படுத்தினார் கேசவன்.



ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *