8 மாநிலங்களுக்குக் கனமழை எச்சரிக்கை! – MET MALAYSIA

- Sangeetha K Loganathan
- 29 Nov, 2024
நவம்பர் 29,
இன்று பெய்து வரும் மழை நாளை வரையில் 8 மாநிலங்களில் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA எச்சரிக்கை விடுத்துள்ளது. Kelantan, Terengganu, Perak, Pahang, Perlis, Kedah, Pulau Pinang , Johor ஆகிய மாநிலங்களின் முக்கியப் பகுதிகளில் கனமழை தொடரும் என்றும் இதனால் ஆறுகளில் நீர்மட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால் அணைகளைச் சோதனையிட வேண்டும் என MET MALAYSIA வலியுறுத்தியது.
பேராக்கில் ஹுலு பேராக், கிளாந்தானின் குவா மூசாங், பகாங்கில் Jerantut, Maran, Kuantan, Pekan , Rompin ஆகிய பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கையையும் MET MALAYSIA விடுத்துள்ளது. முக்கியமாகக் கடலோரப் பகுதிகள் கடல் சீற்றத்தால் பாதிப்புக்குள்ளாகும் அபாயம் உள்ளதாகவும் பொதுமக்கள் நிவாரண மையங்களுக்குச் செல்லும்படி அறிவுருத்தப்பட்டுள்ளது.
MET Malaysia memberi amaran hujan lebat di 8 negeri sehingga esok, termasuk risiko banjir di beberapa kawasan di Perak, Kelantan, dan Pahang. Penduduk diminta berwaspada dan bersedia ke pusat pemindahan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *