நஜீப் வழக்கில் குறுக்கிடாதீர்! நீதிமன்றம் எச்சரிக்கை!

top-news

டிசம்பர் 9,

முன்னாள் பிரதமர் நஜீப் சம்மந்தப்பட்டுள்ள SRC International Sdn Bhd நிறுவனத்தின் வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடத்தப்பட்டு வரும் நிலையில் நீதிமன்றத்திற்கு வெளியே வழக்கு தொடர்பான வாதங்களையோ ஊகங்களையோ வெளியிட வேண்டாம் என அனைத்து தரப்பினர்களுக்கும் முக்கியமாக 6 பேருக்கு நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

SRC International Sdn Bhd நிறுவனத்துடன் தொடர்புடைய RM42 மில்லியன் நிதி மோசடிக் குறித்தான விசாரணைக்கு நஜீப் தரப்பிலிருந்து அவரின் மகனான Dato' Mohd Nizar நீதிமன்றத்தில் ஆதாரங்களைச் சமர்ப்பித்திருக்கும் நிலையில் அதன் மீதான விசாரணை அடுத்த ஆண்டு ஜனவரி 6 நீதிமன்றம் தொடரும் என்றும் அதிவரையில் நஜீப் சிறையில் தான் இருப்பார் என்றும் சட்டத்துறை ஆணையமான Attorney General's Chambers தெரிவித்துள்ளது

இது தொடர்பாக அரசியல் கட்சியினர், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், நஜீப் மீதான விசுவாசத்தை வெளிப்படுத்தும் வகையில் அறிக்கைகளையோ பிரச்சாரங்களையோ முன்னெடுத்து விசாரணைக்குச் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம் என சட்டத்துறை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. 

Mahkamah memberi amaran kepada semua pihak agar tidak mengganggu kes Najib Razak melibatkan RM42 juta SRC International. Pendengaran akan disambung 6 Januari 2024. Najib kekal dipenjara, dan semua pihak diminta menghormati prosiding mahkamah.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *