ராமசாமியின் அவதூறு வழக்கு தள்ளுபடி!

top-news
FREE WEBSITE AD

ஜோர்ஜ்டவுன்‌, டிச. 18: பயனீட்டு இயக்கவாதி கே. கோரிஸ்‌ ஆதனுக்கு எதிராக பினாங்கின்‌ முன்னாள்‌ துணை முதல்வர்‌ பி.ராமசாமி தொடுத்திருந்த அவதூறு வழக்கை ஜோர்ஜ்‌ டவுன்‌ செஷன்ஸ்‌ நீதிமன்றம்‌ நேற்று தள்ளுபடி செய்தது. கோரிஸுக்கு செலவுத்தொகையாக பத்தாயிரம்‌ வெள்ளியை வழங்குமாறு ராமசாமிக்கு நீதிபதி நஸீர்‌ நோர்டின்‌ உத்தரவிட்டார்‌ என்று வாதியின்‌ வழக்கறிஞர்‌ ஷம்ஷிர்‌ சிங்‌ தெரிவித்தார்‌.

கடந்தாண்டு தி வைப்ஸ்‌ எனும்‌  இணையத்தளத்தில்‌ வெளியான ஒரு கட்டுரை தொடர்பில்‌ பினாங்கு பயனீட்டாளர்‌ பாதுகாப்புச்‌ சங்கத்தின்‌ தலைவர்‌ கோரிஸுக்கு எதிராக ராமசாமி. வழக்குத்‌ தொடர்ந்தார்‌.  ராமசாமி பினாங்கு இந்து அறவாரியத்தின்‌ தலைவராக இருந்த வேளையில்‌, குன்றின்‌ மீது உள்ள முருகன்‌ ஆலயத்திற்கு பக்தர்கள்‌ செல்வற்கு கேபள்‌ கார்‌ அல்லது மின்தூக்கி போன்ற வசதிகளை அவர்‌ செய்து தந்திருக்க வேண்டும்‌ என்று. அக்கட்டுரையில்‌ கோரிஸ்‌ வாதிட்டிருந்தார்‌. 

அக்கட்டுரையை நீக்கி மன்னிப்புக்‌ கேட்டுக்கொண்டதைத்‌ தொடர்ந்து தி வைப்ஸ்‌ இணையத்‌ தளமும்‌ அதன்‌ நிருபரும்‌ ராமசாமியுடன்‌ அந்த வழக்கைச்‌ சமரசமாக முடித்துக்‌ கொண்டனர்‌. ஆனால்‌, கோரிஸ்‌ மீதான வழக்குத்‌ தொடர்ந்தது. சம்பந்தப்பட்ட அந்நிருபர்‌ தி வைப்ஸ்‌ நிறுவனத்தில்‌ பணிபுரிகிறார்‌ என்பது தமக்குத்‌ தெரியாது என்றும்‌ அவருடன்‌ நடைபெற்ற உரையாடல்‌ ஒரு தனிப்பட்ட உரையாடல்‌ என்றே தாம்‌ கருதியதாகவும்‌ வழக்குவிசாரணையில்‌ கூறியிருந்தார்‌. இந்நிலையில் நேற்றையத்‌ தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும்படி தமது வழக்கறிஞரைப்‌ பணித்திருப்பதாக ராமசாமி கூறினார்‌.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *