குடும்பச் சுற்றுலா சோகத்தில் முடிந்தது! - இருவர் நீரில் மூழ்கி மரணம்

- Shan Siva
- 22 Jan, 2025
கோத்தா திங்கி, ஜன 22: நேற்று மதியம் பந்தாய் பாயு இம்பியானுக்கு குடும்பச்
சுற்றுலா சென்றபோது 33 வயது பெண்
ஒருவரும் அவரது 13 வயது மகளும்
நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர்.
மாலை 5.30 மணியளவில் அப்பகுதியில் நீந்திக் கொண்டிருந்த
ஐந்து பேர் கொண்ட குடும்பம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக தகவல்
கிடைத்தது என்று கோத்தா திங்கி காவல்துறைத் தலைவர் யூசோப் ஒஸ்மான் தெரிவித்தார்.
குடும்பத்தில்
அந்தப் பெண், 10 வயது சிறுவன்
மற்றும் 10 முதல் 13 வயது வரையிலான மூன்று சிறுமிகள் இருந்தனர். 60 வயதுடைய ஒரு ஆண் உறவினர் அவர்களைக் காப்பாற்ற
முயன்ற நிலையிலும், பலத்த அலைகள் காரணமாக அவர்
கரைக்குத் திரும்பினார் என்று யூசோப் ஓர்
அறிக்கையில் தெரிவித்தார்.
பின்னர் மீட்புக்
குழுவினர் மற்றும் பொதுமக்களால் அந்தக் குடும்பம் கரைக்குக் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், அந்தப் பெண்ணும்
அவரது மகள்களில் ஒருவரும் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *