எதிர்க்கட்சித் தலைவராக ஹம்சா! ஹாடி அவாங் அறிவிப்பு
- Shan Siva
- 13 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 13 — எதிர்க்கட்சித் தலைவர் பதவியைத் துறந்து இரண்டு
மாதங்களுக்குப் பிறகு, லாரூட் நாடாளுமன்ற
உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுதீன் மீண்டும் அப்பதவிக்குத் திரும்புவார் என்று
பாஸ் கட்சியின் தலைவர் டான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் இன்று அறிவித்தார்.
கிளந்தானின் தானா மேராவில்
நடைபெற்ற 'ரீசெட்' மாநாட்டில் உரையாற்றிய ஹாடி, இந்த முடிவை எடுப்பதற்கு முன்பு, பாஸ் கட்சிக்குள் இருக்கும் நாடாளுமன்ற
உறுப்பினர்கள் மற்றும் ஹம்சாவுடன் இணைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும்
கலந்தாலோசித்ததாகக் கூறினார்.
பாஸ் கட்சியின்
கருத்துக்களை மட்டுமல்ல, நாடாளுமன்ற
உறுப்பினர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தோம். எனவே, ஹம்சாவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்க பாஸ் கட்சி
ஒப்புக்கொண்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
பெரிகாத்தான் நேஷனல் (PN)
கட்சியின் தலைவராக டத்தோஸ்ரீ அஹ்மத் சம்சுரி
மொக்தார் தொடர்ந்து நீடிப்பார் என்றும் ஹாடி அறிவித்தார்.
பெர்சாத்து கட்சியுடன் தொடர்ந்து
அங்கம் வகிக்கும் 13 நாடாளுமன்ற
உறுப்பினர்கள் உட்பட, ஹம்சாவுடன் இணைந்த
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களையும் பாஸ் கட்சி கணக்கில்
எடுத்துக்கொண்டதாக ஹாடி கூறினார்.
பாஸ் கட்சியின் உதவித்
தலைவராகவும், தெரெங்கானு மந்திரி பெசாராகவும்
பணியாற்றும் அஹ்மத் சம்சுரி, பெர்சாத்து கட்சியின்
தலைவர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் அப்பதவியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து,
கடந்த பிப்ரவரியில் பெரிகாத்தான் நேஷனலின்
தலைவர் பதவியை ஏற்றார்.
பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்டதைத்
தொடர்ந்து ஹம்சா அப்பதவியிலிருந்து விலகியிருந்தார்; அதன் பிறகு அஹ்மத் சம்சுரி அவருக்குப் பின் எதிர்க்கட்சித்
தலைவரானார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



