ஆம்புலன்ஸ் வண்டியை அபாயகரமான முறையில் பின்தொடர்ந்த ஆடவர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஷா ஆலம், டிச.4-

கூட்டரசு நெடுஞ்சாலையில் அபாயகரமான முறையில் காரோட்டி ஆம்புலன்ஸ் வண்டிக்கும் மற்ற வாகனங்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்திய ஓர் ஆடவரை போலீஸ் கைது செய்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த
இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட 28 வயதுடைய ஆடவரை அதே நாளில் இரவு 11.00 மணிக்கு அக்காரின் உண்மையான உரிமையாளர் விசாரணைக்கு உதவ ஷாஆலம் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்குக் கொண்டு வந்தார் என்று மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் தெரிவித்தார்.

சமூக வலைத் தளத்தில் பரவிய இச்சம்பவம் குறித்து மேற்கொண்ட தொடக்கக்கட்ட விசாரணைப்படி மாலை 4.40 மணிக்குக் கூட்டரசு நெடுஞ்சாலையிலிருந்து கிள்ளானுக்கு அந்த ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருந்த போது ஒரு கார் மற்றும் ஒரு மோட்டார் சைக்கிளும் அதனைப் பின்தொடர்ந்து அபாயகரமான முறையில் சென்றன.

தொடக்கக்கட்ட விசாரணைப்படி இந்த காரை அதன் உரிமையாளர் இவருக்கு இரவலாகக் கொடுத்துள்ளார். கார் உரிமையாளர் 28 வயதுடைய ஆடவருடன் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு வருவதற்கு முன்பு கார் உரிமையாளரின் வீட்டிற்கு போலீஸ் சென்றது.அந்த கார் ஓட்டுநரும் ஆம்புலன்ஸ் வண்டியில் கொண்டு செல்லப்பட்ட நோயாளியின் குடும்ப உறுப்பினர் இல்லை என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அதே சமயம் இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்ட ஒரு மோட்டார் சைக்கிள் ஓட்டுநரையும் போலீஸ் தேடி வருகிறது. இச்சம்பவம் 1987 சாலைப் போக்குவரத்து சட்டம், 4210ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்படுகிறது.இதன் அடிப்படையில் அவசர அவசரமாகச் சென்றுக் கொண்டிருக்கும் வாகனங்களுக்கு வழி விடுவதோடு அவற்றைப் பின்தொடர்ந்து தங்களுக்கும் இதர ஓட்டுநர்களுக்கும் ஆபத்தை ஏற்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் என்று அனைத்து ஓட்டுநர்களுக்கும் அறிவுறுத்தப்படுவதாக ஓர் அறிக்கையில் ஏசிபி முகமட் இக்பால் இப்ராஹிம் குறிப்பிட்டார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *