ரயிலில் பாலியல் தொல்லை! ஆடவர் கைது

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 17: நேற்று ஈப்போவிலிருந்து கே.எல். சென்ட்ரலுக்குச் சென்ற ETS ரயிலில் பயணி ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியதாகக் கூறப்படும் நபரை போலீசார் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் குறித்து ரயில் ஊழியர்களிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து, தஞ்சோங் மாலிம் நிலையத்தில் சந்தேக நபரை போலீசார் தடுத்து வைத்ததாக KTMB  தெரிவித்துள்ளது.

மேலதிக விசாரணைக்காக சந்தேக நபர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். காவல் நிலையத்தில் புகார் அளித்த பிறகு பாதிக்கப்பட்டவருக்கும் உதவி வழங்கப்பட்டது.

இதுபோன்ற முறைகேடுகள் அல்லது துன்புறுத்தல்கள் பயணிகளின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பாதிப்பதால், KTMB இதை மிகவும் தீவிரமாகக் கருதுகிறது. பயனர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் வசதியான சூழலை வழங்குவதில் தாங்கள் உறுதியாக இருக்கிறோம்  என்று அது தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளது.

நிலையங்களிலோ அல்லது ரயில்களிலோ சந்தேகத்திற்கிடமான செயல்களைக் கண்டாலோ அல்லது அனுபவித்தாலோ, உடனடியாக ரயில் ஊழியர்களிடமோ அல்லது அதிகாரிகளிடமோ புகாரளிக்க வேண்டும், அப்போதுதான் விரைவான நடவடிக்கை எடுக்க முடியும் என்று KTMB அறிவுறுத்தியது!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *