சாலையில் சென்ற கார்களின் மீது கற்களை வீசிய நபர் கைது! 6 கார்கள் சேதம்; ஒருவர் காயம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6: ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் உள்ள டாமன்சாரா இணைப்பிலிருந்து பிரியும் ஜாலான் செத்தியா புஸ்பா வெளியேறும் வழியின் அருகே கார்கள் மீது கற்களை வீசியதற்காக, 50 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு நேற்று 26 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அடையாளம் காட்டப்படாத அந்த நபர் மீது, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 427-இன் கீழ் சேதம் விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக பிரிக்ஃபீல்ட்ஸ் காவல் நிலையத் தலைவர் ஹூ சாங் ஹூக் கூறினார்.

அந்த நபர் வீசிய கற்களால்  ஆறு வாகனங்கள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, நேற்று காலை சுமார் 11 மணியளவில் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக ஹூ கூறினார்.

வாகனத்தின் முன்பக்கக் கண்ணாடியின் உடைந்த துண்டுகள் மற்றும் வீசப்பட்ட கல் தாக்கியதால், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவருக்குக் கையிலும் உடலிலும் காயங்கள் ஏற்பட்டதாக அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்,

பின்னர், காவல்துறையினர் சந்தேக நபரை கைது செய்து, பல கற்கள் மற்றும் அபாயகரமான ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் மாற்றியமைக்கப்பட்ட கத்தரிக்கோல் ஆகியவற்றைக் கொண்ட ஓர்  இடுப்புப் பையை பறிமுதல் செய்தனர்.

சோதனையில், சந்தேக நபருக்கு எட்டு குற்றவியல் குற்றங்கள் மற்றும் ஒரு போதைப்பொருள் குற்றத்திற்கான குற்றப் பதிவு இருப்பது தெரியவந்தது என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *