நிலச்சரிவால் போக்குவரத்திற்கு இடையூறு !

- Muthu Kumar
- 06 Jan, 2025
பெட்டாலிங் ஜெயா, ஜன 6:
கேமரன் மலை, ஜாலான் பெசார் கம்போங் ராஜா என்ற இடத்தில் இன்று அதிகாலை நிலச்சரிவு ஏற்பட்டு இரு திசைகளிலும் சாலை போக்குவரத்து தடைப்பட்டது.
கேமரன் மலை பொது பாதுகாப்புப் படை அதிகாலை 3.15 மணிக்கு இது தொடர்பான எச்சரிக்கையைப் பெற்றதும், நிலைமையை மதிப்பிடுவதற்கும் உதவி வழங்குவதற்கும் ஒரு குழுவை தளத்திற்கு அனுப்பியது.
நிலச்சரிவால் இரு திசைகளிலும் போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டுள்ளது, தற்போது அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்று முகநூல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பிற்பகல் முதல் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும், வீடுகளுக்கு சேதமோ, உயிர்சேதமோ ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *