பந்துவான் காசே ஜொகூர்” திட்டம்; 2,80,000 பி40 குடும்பங்களுக்கு நன்மை பயக்கும்!

top-news
FREE WEBSITE AD

(கோகி கருணாநிதி)

ஜொகூர் பாரு, டிச. 15-

ஜொகூர் மாநில அரசு, தனது வரலாற்றில் முதன்முறையாக, இந்த ஆண்டில் மாநிலத்தின் வருவாய் ரிம 2 பில்லியனை தாண்டியுள்ள நிலையில், பந்துவான் காசே ஜொகூர் திட்டத்திற்காக ரிம 16.8 மில்லியனை ஒதுக்கியுள்ளது. இந்த திட்டம் மாநிலம் முழுவதும் உள்ள 2,80,000 வருவாயற்ற மற்றும் குறைவான வருமானமுள்ள (பி40) குடும்பங்களுக்கு நன்மை அளிக்கும் என்று ஜொகூர் மாநில மந்திரி பெசார், டத்தோ ஒன் ஹஃபிஸ் காஸி, நேற்று தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

மாநிலத்தின் 56 சட்டமன்றத் தொகுதிகளிலும் மொத்தம் 5,000 உணவுப்பொருட்கள் அடங்கிய
பெட்டி இந்த ஆண்டு இறுதியில் இருந்து கட்டம் கட்டமாக விநியோகிக்கப்படும்.இந்த பெட்டிகளில் அரிசி, சமையல் எண்ணெய், கோதுமை மாவு, சர்க்கரை, சார்டின் போன்ற அடிப்படை பொருட்கள் அடங்கும்.

நேற்று சிம்பாங் ரெங்கம் பகுதிக்கு சென்றிருந்தபோது, மந்திரி பெசார், மச்சாப் மற்றும் லாயாங்-லாயாங் தொகுதிகளுக்கான பந்துவான் காசே ஜொகூர் திட்டத்தை தொடங்கினார்.இந்த திட்டத்தின் பொருட்கள் டிசம்பர் 2024 முதல் ஜனவரி 2025 வரை ஐந்து கட்டங்களில் வழங்கப்படும். இதன்மூலம், இதர இடமாற்ற பணிகள் சிறப்பாக நடைபெறும் எனவும், தேவைக்கேற்ப கட்டுப்படுத்தப்பட்ட பொருட்களை சரியாக வழங்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஒவ்வொரு கட்டத்திலும் ஒவ்வொரு தொகுதிக்கும் 1,000 உணவுப் பொருள் பெட்டிகள் அனுப்பப்படும்.இந்த பந்துவான் காசே ஜொகூர் திட்டம் பி40 குடும்பங்களின் நலனைக் காக்கும் நோக்கத்தில், ஜொகூர் மாநில அரசு தொடர்ந்த நலத்திட்ட முயற்சிகளில் ஒன்று என்பதைக் குறிப்பிட வேண்டும் என்றார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *