பூனைக்குட்டியை சுவரில் வீசி அடித்தவருக்கு RM 60 ஆயிரம் அபராதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 8: சுயசேவை சலவையகத்தில் ஒரு பூனைக்குட்டியை சுவரில் தூக்கி எறியும் காணொளி வைரலானதைத் தொடர்ந்து,  அந்த வீடியோவில் காணப்பட்ட சம்பந்தப்பட்ட நபருக்கு, காஜாங் அமர்வு நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்தது. 

நீதிபதி கைனூர் அலீசா இஸ்மாயில் முன்னிலையில், நீதிமன்ற மொழிபெயர்ப்பாளர் குற்றச்சாட்டை வாசித்த பிறகு, 49 வயதான தோ டெக் ஹூய் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

மேலும், நீதிமன்றம் தோவுக்கு RM60,000 அபராதம் விதித்தது; அபராதம் செலுத்தப்படாவிட்டால் ஆறு மாத சிறைத்தண்டனையும் விதிக்கப்படும்.

ஏப்ரல் 2 ஆம் தேதி அதிகாலை 3.30 மணி முதல் 4 மணி வரை தாமான் காஜாங் ப்ரிமாவில் உள்ள ஒரு சலவையகத்தில், ஒரு கருப்பு நிற ஆண் பூனைக்குட்டியை சுவரிலும் மெத்தையிலும் மீண்டும் மீண்டும் தூக்கி எறிந்து கொடூரமாகத் துன்புறுத்தியதற்காக, விலங்குகள் நலச் சட்டம் 2015 இன் பிரிவு 29(1)(a) இன் கீழ் தோ மீது குற்றம் சாட்டப்பட்டது.

சம்பவம் நடந்த அன்று, தோ அந்தச் செயலின் 59 வினாடி வீடியோவைத் தனது சமூக ஊடகக் கணக்கில் பதிவேற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டுகின்றன. ஒரு நாள் கழித்து, சிலாங்கூர் JPV விலங்குகள் நல அதிகாரிகள் சம்பவ இடத்தைப் பார்வையிட்டனர்.

முதற்கட்ட சோதனைகளில், பூனைக்குட்டியின் வலது பின்னங்கால் காயமடைந்திருந்ததும், தொட்டபோது அது அசௌகரியமாக இருந்ததற்கான அறிகுறிகளைக் காட்டியதும், அது செயலற்றதாகவும் சோம்பலாகவும் காணப்பட்டதும் தெரியவந்தது.

இந்நிலையில் தோ கடந்த சனிக்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *