சபாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம்!- தயார் நிலையில் மீட்புத்துறை!

- Shan Siva
- 16 Jan, 2025
கோத்த கினபாலு, ஜன 16: சபாவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதால், சபா தீயணைப்பு வீரர்கள் வரும் நாட்களில் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும், மாநிலம் முழுவதும் வெள்ளத்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தணிப்பதற்கும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Penampang, Sipitang, Tenom, and Beaufort போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்கள் மற்றும் நகர்ப்புற இடங்கள் உட்பட, மாநிலம் முழுவதும் குறைந்தது 799 வெள்ளப் பாதிப்புக்குள்ளான
பகுதிகளை சபா தீயணைப்பு மற்றும் மீட்பு சேவை துறை இயக்குநர் ஜைனல் மடாசின்
அடையாளம் கண்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வெள்ளத்தின் போது
பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே மிட்புத்துறையின் முன்னுரிமை என்று ஜைனல் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *