கடும் புயலால் 30 வீடுகள் 20 வாகனங்கள் சேதம்!

top-news

டிசம்பர் 22,

இன்று அதிகாலை ஏற்பட்ட கடும் புயலால் SEMPORNA மாவட்டத்தில் உள்ள 2 கிராமங்கள் கடுமையானச் சேதத்தை எதிர்நோக்கின. கிராமவாசிகளின் 30 வீடுகள் பெரும் சேதத்தை எதிர்நோக்கியது. அதிகாலை 4.20 மணிக்கு மீட்புப் படைக்கு அவசர அழைப்புக் கிடைக்க பெற்றதாக SEMPORNA மாவட்ட மீட்பு ஆணையத்தின் உதவி இயக்குநர் Madzlan Sarman தெரிவித்தார்.

தேசிய வானிலை ஆய்வு மையமான MET MALAYSIA முன்னமே புயல் எச்சரிக்கை விடுத்திருந்ததால் மீட்பு ஆணைய அதிகாரிகளும் சம்மந்தப்பட்ட பகுதிகளில் தயார் நிலையில் இருந்ததால் உயிர் சேதங்கள் ஏதுமின்றி தடுக்க முயன்றாத Madzlan Sarman தெரிவித்தார்.

கடுமையானப் புயலால் உயிர் சேதம் ஏதுமில்லை என்றாலும் 30 வீடுகள் கடுமையானச் சேதத்திற்குள்ளானதாகவும் 20 வாகனங்கள் மீது கூரைகளும் மரங்களும் விழுந்து சேதத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Angin kencang di Semporna merosakkan 30 rumah dan 20 kenderaan di Kampung Selamat serta Kampung Seri Aman. Masjid Kampung Selamat turut rosak. Tiada kemalangan jiwa dilaporkan, menurut Ketua BBP Semporna, Madzlan Sarman.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *