திரெங்கானுவில் கரடி தாக்கி ஆடவர் காயம்!
- Shan Siva
- 31 Jan, 2025
கோலாலம்பூர், ஜன 31: நேற்று திரெங்கானு
கம்போங் தெலிம்பு, ஜெரங்காவ் சுங்கையில்
உள்ள செம்பனை தோட்டத்தில் 40 வயது நபர்
ஒருவர் கரடி தாக்கியதில் பலத்த காயமடைந்தார்.
தலையின்
பின்புறம், கழுத்து, கால்கள் மற்றும் வலது கை ஆகியவற்றில் காயமடைந்த
நிக் அசார் தாவுத் என்ற அந்த நபர், கோல திரெங்கானுவில்
உள்ள சுல்தானா நூர் ஜாஹிரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் குறித்து
புகார் கிடைத்ததை டுங்குன் காவல்துறைத் தலைவர் மைசுரா அப்துல் காதிர்
உறுதிப்படுத்தினார்.
கரடியை
எதிர்த்துப் போராட முயன்றபோது, பாதிக்கப்பட்டவர்
தனது கத்தியை எடுத்து பல முறை குத்தினார், இதனால் விலங்கு பின்வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



