நயினார் நாகேந்திரனை ஆதரித்து சாத்தூர் தொகுதியில் அண்ணாமலை தீவிர பிரச்சாரம்
- Surendran Sumdraraj
- 12 Apr, 2026
விருதுநகர், ஏப். 12-
தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சாத்தூர் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் Nainar Nagendran ஆதரித்து முன்னாள் தமிழக பாஜக தலைவர் K. Annamalai தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
சாத்தூர் தொகுதியின் ஆலங்குளம் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அண்ணாமலை, தமிழகத்தில் ஆட்சி மாற்றமும் அரசியல் மாற்றமும் அவசியம் தேவைப்படுவதாகத் தெரிவித்தார்.
தமிழகத்தைப் பிடித்திருக்கும் தீயசக்தியான திமுகவை அகற்றி மக்கள் நலன் காக்கும் ஆட்சி அமைய வேண்டும் என்ற ஒரே நோக்கில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒன்றுபட்டு செயல்படுகிறது என அவர் கூறினார்.
மேலும், தென்மாவட்ட வளர்ச்சிக்கு பிரதமர் Narendra Modi தனி கவனம் செலுத்தி வருவதாகவும், ஆனால் கடந்த ஐந்து ஆண்டுகளில் தென் மாவட்டங்களுக்கு திமுக அரசு எந்த வளர்ச்சி திட்டங்களையும் கொண்டு வரவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
தென்மாவட்டங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் நடத்தும் திமுக ஆட்சி இனி வேண்டாம் என்றும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வளர்ச்சி ஏற்பட தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே தேவை என்றும் அவர் வலியுறுத்தினார்.
அத்துடன், சாத்தூர் பகுதியில் நிலவும் வறட்சி நிலைக்கு திமுக அரசின் தவறான திட்டமிடலே காரணம் என்றும், செண்பகவல்லி அணை சீரமைப்பு குறித்து அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றும் அண்ணாமலை குற்றம்சாட்டினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



