டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல் தகனம் செய்யப்பட்டது!

- Muthu Kumar
- 05 Dec, 2024
கோலாலம்பூர், டிச. 5-
கடந்த நவம்பர் 28ஆம் தேதி காலமான டான்ஸ்ரீ ஆனந்த கிருஷ்ணனின் நல்லுடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. நேற்று காலை மணி சுமார் 9.45 அளவில், இந்து மத முறைப்படி மேற்கொண்ட சடங்குகளுக்குப் பின்னர், அவரின் நல்லுடல் கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் உள்ள இல்லத்திலிருந்து சுடலைக்குக் கொண்டு செல்லப்பட்டது.
ஆனந்த கிருஷ்ணனின் இறுதி சடங்கிற்கு அவரின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட நெருங்கிய நண்பர்கள் என ஏறக்குறைய 100 பேர் கலந்து கொண்டனர். அவரின் நல்லுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்த, முன்னாள் போக்குவரத்து அமைச்சர் துன் டாக்டர் லிங் லியோங் சிக்கும் வருகையளித்தார்.
1938ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் தேதி, கோலாலம்பூர், பிரிக்பீல்ட்சில் பிறந்த ஆனந்த கிருஷ்ணன், மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியல் துறையில் தொடங்கி ஹார்வார்ட்டில் தமது பட்டப்படிப்பை முடித்தார். தமது நற்குணத்தின் மூலம் பலரால் பெரிதும் மதிக்கப்பட்ட ஆனந்த கிருஷ்ணன், உசாகா தெகாஸ் நிறுவனத்தின் மூலம் தொலைத்தொடர்பு, ஊடகம், இன்னும் பல துறைகளில் தமக்கென ஒரு தனி அடையாளத்தை உருவாக்கினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *