கால்வாயில் காயங்களுடன் ஆணின் சடலம்!

top-news
FREE WEBSITE AD

பெட்டாலிங் ஜெயா, டிச 7:

அம்பாங்கில் உள்ள ஜாலான் மேவா 3/5, பாண்டன் மேவாவில் உள்ள கால்வாய் ஒன்றில் ஆணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதை அடுத்து, போலீஸார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

நேற்று இரவு 11.55 மணியளவில் சடலம் கண்டெடுக்கப்பட்டது குறித்து பண்டான் இண்டா காவல் நிலையத்திற்கு பொதுமக்களிடமிருந்து தகவல் கிடைத்ததாக அம்பாங் ஜெயா காவல்துறைத் தலைவர் அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இறந்தவர், 58 வயதான உள்ளூர் நபர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.புக்கிட் அமானின் தடயவியல் குழு இறந்தவரின் முகம் மற்றும் தலையில் காயத்தின் அறிகுறிகளைக் கண்டறிந்ததாக அவர் கூறினார்.இந்த வழக்கு திடீர் மரணம் என வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *