பாலஸ்தீனியர்களை மீண்டும் அவர்கள் நாட்டுக்கே அனுப்பலாம்! – பாதுகாப்பு அமைச்சர்!

- Sangeetha K Loganathan
- 09 Jan, 2025
ஜனவரி 9,
பாலஸ்தீனப் போரில் பாதிக்கப்பட்ட மக்களை மலேசியாவுக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவர்களில் சிலர் பாதுகாப்பு முகாமிலிருந்து வெளியேற்றும்படி போராட்டம் நடத்தியிருப்பது பெரும் சர்ச்சை கிளப்பியதால் அவர்களை மீண்டும் பாலஸ்தீனத்திற்கு அனுப்புவதற்கானப் பணிகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாகப் பாதுகாப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin இன்று தெரிவித்தார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 127 பாலஸ்தீனியர்கள் மலேசியாவுக்கு அழைத்து வரப்பட்ட நிலையில் அவர்களில் 41 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதால் மற்றவர்கள் பாதுகாப்பாகக் கோலாலம்பூர் Wisma Transit-இல் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தற்போது Wisma Transit-இல் தங்க வைக்கப்பட்டிருப்பவர்கள் மீண்டும் பாலஸ்தீனத்திற்குத் திரும்ப வேண்டும் என முடிவெடுத்து அது போராட்டமாகியிருக்கும் நிலையில் அவர்களை மீண்டும் அவர்களின் தாயகம் அனுப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ளவிருப்பதாகவும் பாதுகாப்பு அமைச்சர் Datuk Seri Mohamed Khaled Nordin விளக்கமளித்தார்.
Kerajaan mempertimbangkan untuk menghantar pulang rakyat Palestin yang menimbulkan isu di Wisma Transit. Menurut Menteri Pertahanan Datuk Seri Mohamed Khaled Nordin, langkah ini diambil selepas 127 rakyat Palestin tiba Ogos lalu, dengan 41 masih menerima rawatan.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *