பருவமழை இல்லாத காலம் எஸ்பிஎம் தேர்வை நடத்தலாமா?கல்வியமைச்சு ஆராய்கிறது!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், டிச. 3-

எஸ்பிஎம் தேர்வை பருவமழை இல்லாத காலத்தில் நடத்தும் சாத்தியம் குறித்து கல்வியமைச்சு ஆராயும் என்று கல்வியமைச்சர் ஃபட்லினா சிடேக் நேற்று தெரிவித்தார். அந்தப் பரிந்துரை குறித்து அமைச்சு விவாதிக்கும். அவ்வப்போது அந்த விவரங்களை அது செம்மைப்படுத்தி வரும் என்று அவர் குறிப்பிட்டார். எங்களிடம் தெரிவிக்கப்பட்ட ஆலோசனைகளில் இந்தப் பரிந்துரையும் ஒன்றாகும். இதனை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம்.

எஸ்பிஎம் தேர்வு வழக்கமாக ஆண்டு இறுதியில்தான் நடைபெற்று வருகிறது. அவ்வேளையில்தான் பருவமழையினால் வெள்ளமும் ஏற்படுகிறது என்று ஃபட்லினா கூறினார்.எஸ்பிஎம் தேர்வில் கலந்துகொள்ளும் பொருட்டு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த இடைநிலைப் பள்ளி மாணவர்கள் தங்கும் விடுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். வெள்ளம் தணியும் வரையில் அவர்கள் அங்கு தேர்வெழுதுவார்கள்.மொத்தம் 5,377 எஸ்பிஎம் மாணவர்கள் இவ்வாறு இடமாற்றம் செய்யப்பட்டனர்.

அவர்களுள் 3,111 பேர் கிளந்தானையும் 1,734 பேர் திரெங்கானுவையும் 532 பேர் கெடாவையும் சேர்ந்தவர்கள் என்று அவர் சொன்னார்.வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களின் மலாய் வாய்மொழிச் சோதனையில் ஏற்கெனவே திட்டமிட்டப்படி கலந்துகொள்வார்கள். ஆனால், அவர்களுக்கு வேறு இடங்களில் அத்தேர்வில் கலந்து கொள்வார்கள்.

தேசியப் பேரிடர் மேலாண்மை முகமை (நட்மா), மலேசிய வானிலைச் சேவைகள்துறை போன்றவற்றின் ஆலோசனையின் அடிப்படையில்தான் இம்முடிவு எடுக்கப்பட்டது. தற்போதைய வடகிழக்கு பருவமழை பிப்ரவரியில்தான் நிற்கும் என எதிர்பார்க்கப்படுவதால், அதுவரை நாம் காத்திருக்க முடியாது என்று ஃபட்லினா கூறினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள எஸ்பிஎம் மாணவர்களுக்கு இரண்டாம் கட்டமாக அத்தேர்வை நடத்தும்படி முன்னாள் கல்வியமைச்சர் ரட்ஸி ஜிடின் நேற்றுமுனதினம் அரசாங்கத்திற்கு கோரிக்கை விடுத்திருந்தார்.அடுத்தாண்டு ஜனவரி 2ஆம் தேதி முதல் பிப்ரவரி 6ஆம் தேதி நடைபெறவிருக்கும் எழுத்துப்பூர்வ எஸ்பிஎம் தேர்வில் 402,956 மாணவர்கள் கலந்துகொள்வார்கள்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *