வெள்ளத்தில் உதவி செய்யாமல் நாடாளுமன்றத்திற்குள் நுழையாதீர்! அன்வார் அறிவுரை!

top-news

நவம்பர் 29,

மலேசியாவில் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் வெள்ள நிவாரணப் பணிகளைக் கட்டாயம் மேற்கொள்ள வேண்டுமென பிரதமர் அன்வார் தெரிவித்தார். இன்று வெள்ளிக் கிழமை. சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் அமைச்சரவை விடுப்பு நாள் என்பதால் அனைத்து அமைச்சரவையினர்களும் தங்கள் பகுதிகளில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் தங்களை ஈடுப்படுத்தும்படி அன்வார் வலியுறுத்தினார்.

விடுமுறை என்றாலும் அருகில் உள்ள வெள்ள நிவாரண மையங்களுக்கு உதவிகளை மேற்கொள்ளும்படியும் மீட்புப் பணியாளர்களுடன் களத்தில் இருக்கும்படியும் ஒற்றுமை அரசின் ஆதரவு எம்.பிகளுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். 

இன்று வெள்ளிக்கிழமை மாலை 4 மணி நிலவரப்படி கிளாந்தானில் 221 நிவாரண மையங்களில் 59,232 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தஞ்சமடைந்துள்ளதாகவும் திரங்கானுவில் 5,916 குடும்பங்களைச் சேர்ந்த 20,911 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PM Anwar mengarahkan semua ahli Parlimen membantu mangsa banjir di kawasan masing-masing, termasuk melibatkan diri dalam pusat pemindahan dan operasi menyelamat. Kelantan dan Terengganu kini terjejas dengan puluhan ribu mangsa banjir.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *