உள்ளூர் வணிகர்களுக்கு முன்னுரிமை அளியுங்கள்! மாநில அரசுக்கு அன்வார் வலியுறுத்து!

- Sangeetha K Loganathan
- 08 Dec, 2024
டிசம்பர் 8,
நாட்டின் வளமானப் பொருளாதாரத்திற்கு உள்ளூர் வணிகர்களை ஊக்குவிக்க வேண்டும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார். அமைச்சுகளின் மூலமாகப் பெறப்படும் வணிக மேம்பாட்டுக்கான நிதிகள் மலேசிய வணிகர்களுக்கு மட்டுமே எனும் நிலையில் மாநில அரசாங்கமும் உள்ளூர் வணிகர்களுக்கான உதவி நிதிகளை வழங்க முன் வர வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார்.
சில மாநில அரசுகள் வெளிநாட்டு வணிகர்களுக்குச் சிறப்பு நிதிகளை மக்களின் வரிப்பணத்திலிருந்து வழங்குவது நம் மக்களுக்கு நாம் செய்யும் துரோகம் என அவர் வலியுறுத்தினார். வெளிநாட்டு வணிகர்கள் மலேசியாவில் முதலீடுகளைச் செய்ய விரும்பினாலும் அதன் தொகை அளவு, அதிகமாக இருந்தாலும் அதற்காக மாநில அரசின் நிதியைப் பயன்படுத்த வேண்டாம் என்பதைப் பிரதமர் அன்வார் வலியுறுத்தினார்.
Perdana Menteri Anwar Ibrahim menegaskan keutamaan kepada peniaga tempatan, meminta kerajaan negeri hanya memberi dana bantuan kepada mereka. Beliau mengkritik penggunaan wang rakyat untuk dana khas kepada peniaga asing, walaupun mereka melabur di Malaysia.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *