துளசி செடி அருகே சிவலிங்கம், விநாயகர் சிலைகளை வைக்கலாமா?
- Muthu Kumar
- 22 Dec, 2025
துளசி செடி இந்து சமயத்தில் மிகவும் புனிதமானது எனப் பார்க்கப்படுகிறது. பாரம்பரியத்தில் இது லட்சுமியின் அவதாரம் என்றும், வீட்டில் வளம், அமைதி மற்றும் செல்வம் கொடுக்கும் செடியாக கருதப்படுகிறது.
இந்த துளசிசெடி வீட்டின் வாசல் பகுதி அல்லது தோட்டத்தில் வளர்க்கப்படுகிறது மற்றும் தினமும் அதனையும் பலர் வழிபாடு செய்யகின்றனர். பாரம்பரிய நம்பிக்கையின் படி, துளசி செடியின் அருகில் சிவலிங்கத்தை வைக்க வேண்டாம் எனக் கூறப்படுகிறது.
இதற்கான காரணங்கள் பழமையான புராணக் கதைகளில் உள்ளது. சிவபுராணத்தின் படி, துளசி என்பவர் உண்மையில் ஜலந்தரன் என்ற அசுர மன்னனின் மனைவியான பிருந்தா ஆவார். சிவபெருமான் போரில் ஜலந்தரனைக் கொன்றார். மனம் உடைந்த பிருந்தா, சிவனைச் சபித்து, பின்னர் துளசிச் செடியாக மாறினாள். இந்த நிகழ்வின் காரணமாக, பக்தர்கள் சிவனுக்கு துளசி இலைகளைச் சமர்ப்பிப்பதையோ அல்லது துளசிச் செடிக்கு அருகில் சிவலிங்கத்தை வைப்பதையோ தவிர்க்கிறார்கள். இது மட்டுமல்ல; துளசி விஷ்ணுவின் மனைவியாகக் கருதப்படுகிறாள். துளசி விஷ்ணுவுக்கு உரியவள் என்பதால், அவள் சிவனுக்கு படைக்கப்படுவதில்லை.
துளசிக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையேயான தொடர்பை மற்றொரு புராணக் கதை விளக்குகிறது. துளசி விநாயகரைக் கண்டபோது, அவரைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், விநாயகர் அதை மறுத்ததால், துளசி வருத்தமடைந்து, அவர் இரண்டு முறை திருமணம் செய்துகொள்வார் என்று சபித்துள்ளார். இதன் காரணமாக, துளசிச் செடிக்கு அருகில் விநாயகர் சிலைகளை வைப்பது அசுபமானது என்று நம்பப்படுகிறது.
துளசி விஷ்ணுவின் தெய்வீகத் துணைவியாகக் கருதப்படுவதால், விஷ்ணுவுடன் தொடர்புடைய பொருட்கள் பொருத்தமானவையாகக் கருதப்படுகின்றன. எனவே, பக்தர்கள் பொதுவாக விஷ்ணுவின் கல் வடிவம், லட்சுமி தேவியின் சிலை, விஷ்ணு தொடர்பான பிற சின்னங்கள் அல்லது பொருட்களை வைக்கலாம்.சில வாஸ்து நிபுணர்கள் கூறுவது, துளசி செடி அருகே சிவலிங்கம் அல்லது விநாயகர் சிலைகளை வைப்பது எதிர்மறையான சக்திகளை உருவாக்கலாம் என்று கூறுகின்றனர்.
துளசி செடி இந்து மரபில் மிகப் புனிதமானதாகக் கருதப்படுகிறது. வீட்டு வாசலில் அல்லது மனைவாசலில் வளர்க்கப்படும் துளசி செடி, செல்வம், சுகம், அமைதி, பாக்கியம் அளிப்பதாக நம்பப்படுகிறது. இதனை மகாலட்சுமியின் அவதாரமாக கொண்டாடி தினமும் பூஜை செய்யும் வழக்கமும் உள்ளது. ஆயிரம் ஆண்டுகளாக மத நம்பிக்கை, ஆன்மிக உணர்வு மற்றும் குடும்ப ஒற்றுமையின் அடையாளமாக துளசி மதிக்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



