டேங்கர் லாரியைத் திருடிய ஆடவன்! - திருடிய 2 மணி நேரத்திற்குள் பிடிபட்டான்!

- Shan Siva
- 20 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 20: பத்து
பஹாட்டில் உள்ள ஜாலான் லாபிஸ்-யோங் பெங்கில் நிறுத்தப்பட்டிருந்த செம்பனை எண்ணெய்
டேங்கர் லாரியைத் திருடிய 41 வயது ஆடவர், திருடிய இரண்டு
மணி நேரத்திற்குள் கைது செய்யப்பட்டார்.
ஜாலான்
லாபிஸ்-யோங் பெங்கில் நிறுத்தப்பட்டிருந்த தனது வாகனம் காணாமல் போனதைக் கண்டறிந்த
பின்னர் டேங்கரின் உரிமையாளர் புகார் அளித்ததாக பத்து பஹாட் காவல்துறைத் தலைவர்
ஷாருலானுவார் முஷாதத் அப்துல்லா சானி தெரிவித்தார்.
இதனை அடுத்து தங்காக் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறையைச் சேர்ந்த அதிகாரிகள்
மற்றும் உறுப்பினர்கள் குழு காலை 10.50 மணிக்கு மலாக்காவின் ஜாசின், சுங்கை ரம்பையில்
சம்பந்தப்பட்ட டேங்கர் லாரியை வெற்றிகரமாகக் கண்டுபிடித்தது என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *