வாக்யூ மாமிசம் கடத்தல் முயற்சியை மாக்கிஸ்- சுங்கத் துறை முறியடித்தன!

- Muthu Kumar
- 23 Dec, 2024
(கோகி கருணாநிதி)
கேலாங் பாத்தா, டிச.23-
மலேசிய மாக்கிஸ் மற்றும் மலேசிய சுங்கத் துறை இணைந்து, சிங்கப்பூரிலிருந்து ஜப்பானிய வாக்யூ மாமிசத்தை அனுமதியின்றி ஜொகூருக்குக் கொண்டு வர முயன்ற முயற்சியை நேற்று முறியடித்துள்ளன.
இச்சம்பவம் சுல்தான் அபூபக்கர் மையத்தில் நடைபெற்றது. பரிசோதனையில், 21.4 கிலோகிராம் வாக்யூ மாமிசம் மூன்று பெட்டிகளில் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. சந்தை மதிப்பில் சுமார் 18,832.00 ரிங்கிட் மதிப்புள்ள இந்த மாமிசம், விலங்குகளின் சுகாதார சான்றிதழ் மற்றும் ஹலால் சான்றிதழின்றி கொண்டு வரப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இந்த மாமிசம் அனுமதியின்றி கொண்டு வரப்பட்டதால், இது "சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 2011" (Act 728) அடிப்படையில் குற்றமாகும். குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக 100,000 ரிங்கிட் அபராதம் அல்லது ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு உள்ளது.
மாக்கிஸ் மற்றும் சுங்கத் துறை இணைந்து தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.மேலும் தகவலுக்கு மாக்கிஸ் அதிகாரி மொஹமட் நஸ்வான் பின் அஸ்மானை 013-7176176 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *