கெந்திங் மலையில் கவனக்குறைவில் சறுக்கிய கார்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 24: கெந்திங் ஹைலேண்ட்ஸில், கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதால் கார் சறுக்கி விபத்துக்குள்ளான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஹோண்டா CR-Z காரை ஓட்டிச் சென்ற 27 வயது ஓட்டுநர் நேற்று காலை 11.05 மணிக்கு காவல்துறையில் புகார் அளித்ததாக பெந்தோங் காவல்துறைத் தலைவர் ஜைஹாம் கஹார் தெரிவித்தார்.

இந்த சம்பவம் தொடர்பான 1genthi2 வினாடி வீடியோ டிக்டோக்கில் வைரலாகி வருவதாகவும், கார் கவனக்குறைவாக ஓட்டிச் செல்வதற்கு முன்பு சறுக்கிச் சென்று சாலையை விட்டு விலகிச் செல்வதைக் காட்டுவதாகவும் ஜைஹாம் ஙோர் அறிக்கையில் தெரிவித்தார்.

ஓட்டுநரின் செயல்கள் மற்ற சாலைப் பயனர்களுக்கு ஆபத்தை விளைவித்துள்ளதாக அவர் கூறினார். இதனை அடுத்து ஓட்டுநருக்கு வாக்குமூலம் அளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

பொறுப்பற்ற மற்றும் ஆபத்தான வாகனம் ஓட்டியதற்காக சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 42(1) இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *