போலீஸ் லாரி மீது மோதிய கார் தீப்பற்றி எரிந்தது!

- Shan Siva
- 17 Feb, 2025
கோலாலம்பூர், பிப் 17: காப்பார், ஜலான் புக்கிட் செராக்கா என்ற இடத்தில் இன்று அதிகாலை ஒரு
கார் போலீஸ் லாரி மீது மோதியதில் தீப்பிடித்தது.
தீயணைப்பு
வீரர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கார் கிட்டத்தட்ட முற்றிலுமாக எரிந்துவிட்டதாக
காப்பார் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை தலைவர் நூருல் அஸ்மான் முகமட் கூறினார்.
இன்று காலை
சுமார் 6.50 மணியளவில் தனது
குழுவுக்கு அழைப்பு வந்து சம்பவ இடத்திற்கு விரைந்ததாக அவர் கூறினார்.
காரின்
ஓட்டுநருக்கு கால் முறிந்தது, மூன்று
காவல்துறையினருக்கு லேசான காயம் ஏற்பட்டது என்று அவர் ஓர் அறிக்கையில்
தெரிவித்தார்.
சம்பவ இடத்திற்கு
ஆம்புலன்ஸ் விரைந்ததாக நூருல் அஸ்மான் மேலும் கூறினார்.
ஓட்டுநர் மற்றும் காவல்துறையினர் சிகிச்சைக்காக கிள்ளான், தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை செயல்பாட்டு உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் மொக்தார் தெரிவித்தார்.
கார் ஓட்டுநரை, கார் கண்ணாடியை உடைத்து போலீஸ் அதிகாரிகள் மீட்ட வேளையில், கார் தீப்பற்றியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது!
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *