அமைச்சருக்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்த பண்ணைத் தொழிலாளிக்கு RM 3000 அபராதம்!

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், பிப் 27: : சுற்றுலா, கலை மற்றும் கலாச்சாரத்துறை அமைச்சர் தியோங் கிங் சிங்கிற்கு எதிராக கொலை மிரட்டல் விடுத்ததற்காக  பண்ணை தொழிலாளி ஒருவருக்கு மாஜிஸ்திரேட் நீதிமன்றம் RM3,000 அபராதம் விதித்துள்ளது.

 தியோங்கை குற்றவியல் ரீதியாக மிரட்டியதாக குற்றம் சாட்டப்பட்ட லிம் சாய் செங் என்ற 36 வயது நபர்  குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து, மாஜிஸ்திரேட் ஐனா அசாஹ்ரா அரிஃபின்  இந்த அபராதத்தை விதித்தார்.

அபராதத்தை செலுத்தத் தவறினால் ஆறு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம், பிப்ரவரி 18 அன்று மதியம் 1.37 மணியளவில் தொலைபேசி அழைப்பு மூலம் இக்குற்றத்தைச் செய்ததாக லிம் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *