8 ஆண்டுகளுக்குப் பிறகு லீக் கப் இறுதிப் போட்டிக்கு அர்செனல் தகுதி – செல்சியை 1-0 வீழ்த்தியது

top-news

லண்டன், பிப். 4-

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக அர்செனல், லீக் கப் (Carabao Cup) இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று அதிகாலை நடந்த அரையிறுதி இரண்டாம் போட்டியில், மாற்று வீரராக களமிறங்கிய காய் ஹாவர்ட்ஸ் அடித்த கோல் மூலம் அர்செனல், செல்சியை 1-0 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

முதல்  போட்டியில் ஸ்டாம்போர்டு பிரிட்ஜில் 3-2 என வெற்றி பெற்றிருந்த மைக்கல் ஆர்டெட்டா தலைமையிலான அர்செனல், இரண்டாம் லெக் போட்டியிலும் ஆட்டத்தின் இறுதி வரை கடுமையாகப் போராடியது. எமிரேட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், ஹாவர்ட்ஸ் காயம் நேரத்தின் 7ஆவது நிமிடத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.

இந்த வெற்றி “தி கன்னர்ஸ்” அணிக்கு மிகுந்த நிம்மதியை அளித்ததாக கூறப்படுகிறது. காரணம், இதற்கு முன்பு அவர்கள் தொடர்ச்சியாக நான்கு அரையிறுதிகளில் தோல்வியடைந்திருந்தனர். இதில் 2025 சாம்பியன்ஸ் லீக் மற்றும் லீக் கப், 2022 லீக் கப், 2021 யூரோபா லீக் ஆகியவை அடங்கும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *